சேனநாயக்க சமுத்திரத்தில் நீர்மட்டம் அதிகரிப்பு பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.!



DS சேனநாயக்க சமுத்திரத்தில் நீர்மட்டம் அதிகரிப்பு பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


அம்பாறை இக்கிணியாகல DS சேனநாயக்க சமுத்திரத்தில் தற்போது பெய்து வரும் அடை மழை காரணமாக நீர் மட்டம் அதிகரித்து வருவதால் குளத்தில் இருக்கும் மேலதிக நீரை வெளியேற்ற இன்று (14.01.2025) மாலை 5 ஐந்து மணிக்கு வான் கதவை திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக  ஒலுவில் களியோடை , வாங்காமம் போன்ற ஆற்றுப் பிரதேசம் உட்பட கல்லோயா ஆற்றினை அண்மித்துள்ள பிரதேசங்களை அண்டியதாக வாழும் அட்டாளைச்சேனை பாலமுனை ஒலுவில் பிரதேச பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்

அத்தோடு வயல் பிரதேசங்களில் போக்குவரத்து செய்பவர்கள் மற்றும் நீர் கரை ஓரங்கள்   தாழ் நிலங்களில் வீடு கட்டி வசிப்பவர்கள் மிகவும்  அவதானமாக  இருந்து கொள்ளுங்கள்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்