மூதூர் தாஹா நகரிலுள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக் காயங்களுடன் 02 சகோதரிகள் சடலமாக மீட்பு.!!

மூதூர் தாஹா நகரிலுள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக் காயங்களுடன் 02 சகோதரிகள் சடலமாக மீட்பு.

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (14) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மூதூர், தாஹா நகர் பகுதியில் ஶ்ரீதரன் தர்ஷினி என்பவருடைய வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, ஶ்ரீதரன் ராஜேஸ்வரி (68) மற்றும் அவரது பெரியம்மாவான சக்திவேல் ராஜகுமாரி (74) ஆகிய இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் உயிரிழந்த ஶ்ரீதரன் ராஜேஸ்வரி என்பவரின் 15 வயது மகள் வெட்டு காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சடலம் மேலேதிக பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு  சொல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்