இந்தியாவில் இருந்து ஜனாதிபதிக்கு அனுரகுமார திசநாயக்கவுக்கு வந்த கடிதம்.!!

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் சம்பவம் தொடர்பாக இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள அனுரகுமார திசாநாயக்கவிற்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.

இந்தியா இலங்கைக்கு இடைப்பட்ட கடற்பகுதியில் இருநாட்டு மீனவர்களுக்கும் பாரம்பரிய மீன்பிடி உரிமை இருப்பதால், பரஸ்பர மரியாதையை நாம் கடைபிடிக்க வேண்டுமென்றும், கடந்த காலங்களில் இலங்கையை ஆண்டவர்கள் செய்த அதே தவறுகளை இலங்கையின் புதிய நம்பிக்கையாக பார்க்கப்படுகிற அனுர குமார திசாநாயக்க செய்ய வேண்டாமென்றும் கோரிக்கை வைத்திருக்கிறேன்.

இலங்கையில் புதிய அரசு அமைந்திருக்கும் சூழலில் இந்திய அரசு ராஜாங்க ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்து மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்