இலங்கையின் உள்விவகாரங்கள் பாதிக்கப்படாமல், நாட்டின் இறையாண்மைக்கு மதிப்பளித்து இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு வினைத்திறனான பங்கை ஆற்ற தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.
நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த திரு.லின் ஜியான், தேர்தல் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றதாக மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக