ரயில் முன் மகளை தள்ளிவிட்டு தானும் பாய்ந்து தற்கொலை கந்தளாயில் சம்பவம்..!!

ரயில் முன் மகளை தள்ளிவிட்டு  தானும் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை - கந்தளாயில் சம்பவம்.

திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் இரவு தபால் ரயிலில் இருந்து தந்தை மகளை தள்ளிவிட்டு , தந்தையும் ரயிலிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தந்தையும் மகளும் நீண்ட நேரமாக ரயில் தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்ததாகவும், ரயில் வந்ததும் தந்தை மகளை தள்ளி விட்டு தானும் ரயில் முன்  குதித்ததாகவும் அவர்கள் அடையாளம் தெரியவில்லை என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்
திருகோணமலை -கந்தளாய் புகையிர நிலையத்திற்கு அருகில் இச்சம்பவம் இன்றிரவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இருவரின் சடலமும் கந்தளாய் வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்