இன்று (02) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் மீரிகம தங்கொவிட்ட பிரதேசத்தில் சம்பவம்.!!

மீரிகம தங்கொவிட்ட பிரதேசத்தில் இன்று (02) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உள்ளூர் மதுபானசாலையில் கொள்ளையடிக்க வந்த சந்தேக நபர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வேளையில் சாலையில் சட்டென கடந்து சென்ற பேருந்தில் பயணித்த பெண் மீது துப்பாக்கி சூடு பட்டு இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த 29 வயதுடைய பெண்ணின் சடலம் வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தங்கோவிட்ட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்