ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஒருவர் கைது!

ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஒருவர் கைது!

சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ் 

வீட்டில் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு விற்பனைக்காக இருந்த ஐஸ் போதைப் பொருளையும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய சுற்றுச்சூழல் பிரிவினர் மீட்டுள்ளனர்.


இந்தச் சம்பவம் நேற்று (02) ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.


அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மட்டக்களப்புத் தரவை 01 பகுதியில் இக் கைது இடம்பெற்றுள்ளது.


சம்மாந்துறை சுற்றுச்சூழல் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையின் போது 37 வயதுடைய சந்தேக நபர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவ்வாறு கைதான சந்தேக நபரிடமிருந்து 770 மில்லிகிராம் மீட்கப்பட்டது. சந்தேக நபர் சான்றுப் பொருள்களுடன் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


அத்துடன், இந்தச் சோதனை நடவடிக்கையானது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில் பொலிஸ் சுற்றுச்சூழல் பிரிவு பொறுப்பதிகாரி ஏ. நஸார் தலைமையிலான குழுவினர் இச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்