நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற குற்றவாளி.

நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற குற்றவாளி.

புதுக்கடை நீதிமன்றில் துப்பாக்கிச் சூடு துடிதுடித்து உயிரிழந்த சந்தேக நபர்..!


கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாக கருதப்படும் கனேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கனேமுல்ல சஞ்சீவவை விசாரணை நடவடிக்கைகளுக்காக பூஸா சிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சந்தர்ப்பத்திலேயே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

சாதுரியுமான முறையில் துப்பாக்கியை சட்ட நூலில் மறைத்து நீதிமன்றத்திற்குள் சூத்திரதாரி கொண்டு வந்துள்ளார்.

அதேவேளை , துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் சட்டத்தரணியின் தோற்றத்தில் வருகைதந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்