மன்னார் நீதிமன்றம் முன்பாக துப்பாக்கிப் பிரயோகம் மன்னார் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு இருவர் பலி.
மன்னார் நீதிமன்றம் முன்பாக பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்காக இன்றைய (16) தினம் வியாழக்கிழமை வருகை தந்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நீதிமன்ற முன்றலில் அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
குறித்த சம்பவத்தால் நீதிமன்ற சூழலில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வழக்கொன்றுக்காக மன்னார் நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்த தரப்பினர் மீதே, இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதென்று தெரிவிக்கப்படுகிறது.














கருத்துரையிடுக