ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவன் நிப்ரான் தேசிய மட்டத்தில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை.

ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவன் நிப்ரான் தேசிய மட்டத்தில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை.

ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் எம்.எப்.எம்.நிப்ரான் தேசிய மட்ட கணித வினா விடை - கணித புதிர் போட்டியில் பங்குபற்றி தேசியத்தில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தெரிவித்தார்.  

2024 ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட கணித வினா விடைப் போட்டியில் 4 பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் ஒன்றான கணித புதிர் போட்டியில் கிழக்கு மாகாணம் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.

இதில், கிழக்கு மாகாணம் சார்பாக பங்குபற்றிய ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் க.பொ.த உயர்தரத்தில் பௌதீக விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கும் எம்.எப்.எம்.நிப்ரான் தங்க பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தேசியத்தில் சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்ற மாணவனுக்கும், வழிகாட்டிய ஆசிரியர்கள் ஆதரவு வழங்கிய பெற்றோர்கள், கல்வி அதிகாரிகள் அனைவருக்கும் பாடசாலை அதிபர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்