பிபில - பகுதியில் இன்று இரவு இரண்டு பேருந்துகள் மோதியதில் 47 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.!!

பிபில - பகுதியில் இன்று இரவு இரண்டு பேருந்துகள் மோதியதில் 47 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து இன்று (05) இரவு 07.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், பிபிலையிலிருந்து அம்பாறை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும், பின்னால் அதே திசையில் பயணித்த  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும்
மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தனியார் பேருந்தில் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் சிலர் பயணித்துள்ளனர். பணியாளர்கள் இறங்குவதற்காக பேருந்தை நிறுத்தியபோது ​​பின்னால் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு
சொந்தமான பஸ் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்